பல்கலைக்கழக கல்வி தரம் மேம்பாடு – யுஜிசி புதிய உத்தரவு!!
நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கல்வி தரத்தை உயர்த்த பேராசிரியர்கள் அடங்கிய குழு அமைத்து செயல்பட வேண்டும் என பல்கலைக்கழக மானிய குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழு அறிவிப்பு:
நாட்டில் கொரோனா காரணமாக கல்வி நிறுவனங்கள் 10 மாதங்களாக திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று மாணவர்களுக்கு எந்த அளவில் கற்றல் திறன் அதிகரித்துள்ளது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் துணைவேந்தர்கள், முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதில், “நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி தரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து கல்லூரிகளையும் மேம்படுத்துவது கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பாகும். கொரோனா தாக்கம் காரணமாக நாடே அச்சத்தில் இருந்த நேரத்திலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி தேர்வுகள் நடத்தியது சாமர்த்தியமாக பணிபுரிந்து பாராட்டத்திற்குரியது.
10, 12 பொதுத்தேர்வு மையங்கள் மாற்றம் – சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு வெளியீடு!!
இருந்த போதிலும் தேசிய கல்விக் கொள்கையின் படி கல்வியின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்து விடக்கூடாது. மேலும் கல்வியின் தரத்தை உயர்த்த பேராசிரியர்கள் 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாக பிரிந்து, அந்த குழுக்கள் மூலமாக கல்வி தர மேம்பாட்டு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்”, என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யுஜிசி சுற்றறிக்கையினால் என்ன பலன் நேர்ந்நுவிடப் போகிறது. கொரனாவை காரணம் காட்டி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டது கல்வித்துறையே. மாணவர்களின் கல்வி தரத்தை எது நிர்ணயிக்கிறது? அவர்களின் திறன் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது? தேர்வுமுறைதானே. ஒரு மாணவன் பெற்றுள்ள மதிப்பெண்ணை கொண்டு அவனது தரமான கல்வி என்ற முடிவு செய்துவிடலாமா? இன்றைய படித்த பட்டதாரிகளில் எதிர்காலத்தை இழந்தவர்கள் பலர், ஏட்டுச்சுரக்காய் கறிக்கு ஆகுமா ? படித்தவனுக்கு வேலையில்லை, பட்டதாரி இளைஞன் தற்கொலை, போதைக்கு அடிமையான பொறியாளன் என எண்ணற்ற பிரச்சினைகளில் பட்டதாரிகள் உழலுகின்றனர். எனில் இவர்கள் கற்ற கல்வி தரமானதா? கல்வி என்றால் என்ன? கற்பதனால் பயன் என்ன? இது பற்றி யுஜிசி சிந்திக்க வேண்டும். படிக்கும் பாடங்களுக்கும் வாழ்க்கைக்கும் துளியேனும் தொடர்பு இருக்கிறதா? ஒரு பாடதிட்டம் என்னென்ன பயனை அளிக்கிறது என்பதில் யுஜிசி கவனம் செலுத்த வேண்டும். இனியேனும் தரமான கல்வியென்றால் என்னவென்று யுஜிசி அறிவுறுத்த வேண்டும்.
அருமையான முன்னெடுப்பு வாழ்க்கையை கற்றுத்தராத எந்த ஒரு கல்வியும்
சிறந்தது இல்லை என்கிறார் சுவாமி விவேகானந்தர். எனவே பேராசிரியர்கள் குழு மாணவர்களின் அக மேம்பாட்டையும் அறிவுத்திறன் மேம்பாட்டையும் உயர்த்த வழி வகை செய்ய வேண்டும்.. நன்றி
முனைவர். மு. ஜோதிலட்சுமி
இணைப்பேராசிரியர்
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சி – 17