தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை – ஏப்., 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!!!
பல்கலை கழக மானியக்குழு தொலைதூர மற்றும் இணைய வழி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை ஏப்ரல் 30ம் தேதி வரை நடத்தி கொள்ள அனுமதி அளித்துள்ளது.
பல்கலைமானியக் குழு:
இந்தியாவின் பல்கலைகழக மானியக்குழு (யூஜிசி) என்பது இந்தியாவில் உள்ள பல்கலை கழகங்களின் கல்வியினை ஒருங்கிணைப்பது , மேற்பார்வையிடுவது, கல்வியின் தரத்தை உறுதி செய்வது போன்ற பணிகளுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். அரசு பல்கலை கழகங்களுக்கு தேவையான மானிய நிதியினை வழங்கும் பணியையும் செய்கிறது. மேலும் ஆண்டு தோறும் கல்வி உதவி தொகை தேவைப்படும் மாணவர்களுக்கான உதவி தொகையையும் வழங்குகிறது.
‘வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை & அனைவருக்கும் வீடு ‘ – 2021 அதிமுக தேர்தல் அறிக்கை!!!
மாணவர் சேர்க்கை:
யுஜிசி -ன் 550 வது ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அனைத்து பல்கலைக் கழகத்தை சேர்ந்தவர்களும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தொலைதூர, இணையவழி மற்றும் திறந்த நிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்திவதற்கு ஏப்ரல் 30ம் தேதி வரை அனுமதியளித்துள்ளது. இதுகுறித்து யுஜிசி செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அறிக்கை:
பல்கலை மானியக்குழுவின் அறிக்கையில், யுஜிசி 550 வது ஆலோசனை கூட்டத்தில் எழுந்த கோரிக்கையை ஏற்று மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை மே 15ம் தேதிக்குள் யுஜிசி க்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உரிய அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்