போலீசாரால் கைது செய்யப்பட்ட விஜய் டிவி நடிகர்.. தொடரை விட்டு நீக்கிய சீரியல் குழு – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “செல்லம்மா”. இதில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் அர்னவ், தற்போது சீரியலை விட்டு விலகி இருக்கிறார். அவருடைய மனைவி திவ்யா உடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் கைது செய்யப்பட்டதால் சீரியலில் இருந்து விலக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விலகல்
தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமாக பலர் இருந்தாலும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் அனைவராலும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சீரியல் நடிகர் நடிகைகளின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் பேசப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யாவின் குடும்ப பிரச்சனை தான் அதிகம் செய்தியாக வந்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அர்னவ் விஜய் டிவி செல்லம்மா சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அவருடைய மனைவி திவ்யாவும் பிரபலமான சீரியல் நடிகை தான். இந்நிலையில் அர்னவ் அவருடைய மனைவியை கர்ப்பிணி என பார்க்காமல் தாக்கியதாகவும், பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அர்னவ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அர்னவிற்கு எதிரான ஆதாரங்களை திவ்யா வெளியிட்டார்.
பல ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை.. ரச்சித்தாவின் வாழ்க்கை தடம் புரண்டதற்கு முக்கிய காரணம்!
Exams Daily Mobile App Download
அதனால் நடிகர் அர்னவ் படப்பிடிப்பு தளத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அர்னவ் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் காவலில் இருப்பதால், அவரை செல்லம்மா சீரியலை விட்டு விலக்கி உள்ளார்கள். அவருக்கு பதிலாக யார் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அர்னவிற்கு பதிலாக திலீபா ஷெட்டி என்பவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புதிய சீரியலில் இந்த மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.