தமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா – இன்று 3,986 பேருக்கு தொற்று!!
கொரோனா வைரஸின் இரண்டாம் அலையின் தாக்கத்தால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிய பாதிப்பு எண்ணிக்கை நான்காயிரத்தை எட்டியுள்ளது.
கொரோனா பாதிப்பு:
கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு உயர்ந்து வரும் வைரஸின் புதிய தாக்கத்தால் நாடே ஸ்தம்பித்துள்ளது. இந்த கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் மத்திய அரசும், மாநில அரசுகளும் திணறி வருகின்றனர். மஹாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பல கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது அம்மாநில அரசுகள்.
அதே நேரத்தில் தமிழகத்திலும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. ஆனால் முன்பு போலவே மக்கள் கொரோனா அச்சம் இன்றி பொது இடங்களில் முகக்கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரவு நேர ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்துமா? ட்விட்டரில் ட்ரெண்டிங்!
இதனடிப்படையில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,11,110 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 17 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12,821 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8,70,546 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது மருத்துவமனைகளில் 27,743 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்