தமிழகத்தில் நாளை (மார்ச் 11) முழு அடைப்பு போராட்டம் – பேருந்துகள் இயங்குமா? மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை!
கடலூர் மாவட்டத்தில் நாளை (மார்ச் 11) என்.எல்.சிக்கு எதிராக முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வணிக நிறுவனங்கள் மற்றும் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முழு அடைப்பு:
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க பணிகளுக்காக விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 2006ம் ஆண்டு பெறப்பட்ட நிலத்தை சமன்படுத்தும் பணியை என்.எல்.சி மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் – வெளியான முக்கிய அறிவிப்பு!
இதனை கண்டித்து அப்பகுதியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்பு காரணமாக அப்பகுதியில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிலம் கையப்படுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (மார்ச் 11) கடலூரில் பாமக முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த போராட்டத்திற்கு அனைத்து வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் முழு அடைப்பு போராட்டம் குறித்து பாமகவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் உரிய பாதுகாப்புடன் வணிக நிறுவனங்கள், பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.