தமிழகத்தில் நாளை (ஆக.17) ‘இந்த’ பகுதிகளில் மின்தடை – முழு விவரம் இதோ!
கோவை மாவட்டத்தில் உள்ள கள்ளிமடை பகுதி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஆகஸ்ட் 17) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள் குறித்து செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.
மின்தடை:
இந்தியாவில் மக்கள் தொகை கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்து காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நாட்டில் மின் தேவைகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர கடந்த பதினைந்து வருடங்களாக தொழில் துறையில் மின் தேவை அதிகரித்து வருகிறது. இருப்பினும் இந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை.இதன் காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்தியாவில் மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு துணை மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணை மின் நிலையங்களை சரியாக பராமரித்து வருவதன் மூலம் சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு செல்ல முடியும். மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது பணியில் ஈடுபடும் மின் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பணிகள் நடைபெறும் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படுகிறது.
EPS வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அப்டேட் – இரட்டிப்பாகும் ஓய்வூதியம்! முழு விவரம்!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் கோவை மாவட்டம் கள்ளிமடை பகுதியில் உள்ள காமராஜர் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிகோணம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமானம் நிலையம் வரை, வரதராஜ புரம், நந்தா நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஒண்டிப்புதூர்(ஒரு பகுதி), மசக்காளிபாளையம்,மருத்துவ கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(புதன் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.