தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை:
தமிழகத்தில் மே மாத வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் மக்கள் பெரும் கிராமத்திற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் சில பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து இந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
TN MRB தமிழக மருத்துவ துறை வேலைவாய்ப்பு – 2553 காலிப்பணியிடங்கள்!
அதேபோல் மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை அறிவித்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சண்டிகார், டெல்லி, ஹரியானா, கிழக்கு உத்தரப்பிரதேசம் மாநிலங்களில் புழுதி புயலுக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்வதனால் குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.