தமிழகத்தில் அடிச்சு ஊத்தும் மழை – ‘இந்த’ மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

0
தமிழகத்தில் அடிச்சு ஊத்தும் மழை - 'இந்த' மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!
தமிழகத்தில் அடிச்சு ஊத்தும் மழை - 'இந்த' மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!
தமிழகத்தில் அடிச்சு ஊத்தும் மழை – ‘இந்த’ மாவட்டங்களுக்கு வானிலை அலர்ட்!

தமிழகத்தில் தென்காசி, நீலகிரி திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்:

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகமாக காரணமாக கடந்த சில தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மலை பகுதிகளில் இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. இது குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று (ஜூலை.06) நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

அதே போல ஜூலை 7, 8, 9, 10 ஆகிய 4 தினங்களும் தமிழகம் மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மழை பெய்யக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம். மேலும் வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் நிலை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி – அரசு முக்கிய அறிவிப்பு!

அத்துடன் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படியும் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!