தமிழகத்தில் சட்டென உயர்ந்த ஆபரணத்தங்கத்தின் விலை – இன்றைய நிலவரம் இதோ!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 120 உயர்ந்து விற்பனையாகி வருகிறது. வாரத்தின் தொடக்கத்திலேயே திடீரென உயர்ந்த தங்கத்தின் விலையால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் அனைத்து சுப நிகழ்ச்சிகளிலும் தங்கம் மற்றும் அதனால் ஆன அணிகலன்கள் முக்கிய இடத்தை பிடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் ஆபரணத்தங்கத்தின் விலையானது தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த நகைப்பிரியர்கள் நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக இன்று (அக்.10) காலை நேர நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது.
இதனையடுத்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ. 43,040-க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 15 உயர்ந்து ரூ. 5,380-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி கிராம் ரூ.75.50-க்கும் கிலோ ரூ.75,500-க்கு விற்கப்பட்டு வருகிறது.