TNUSRB 11,741 காவலர் பணியிடங்களுக்கு உடற்தகுதித்தேர்வு – நாளை தொடக்கம்!
தமிழகத்தில் உள்ள இரண்டாம் நிலை காவலர் பணிக்கு காலியாக இருந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து நாளை முதல் இந்த பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெறும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறை
தமிழகத்தில் உள்ள சிறை மற்றும் தீயணைப்பு துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 11 ஆயிரத்து 741 பணியிடங்கள் காலியாக இருந்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த பணிகளுக்கு என்று கடந்த பிப்ரவரி மாதம் எழுத்துத் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது இந்த தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த தேர்வர்களுக்கு நாளை முதல் தமிழகத்தில் உள்ள 20 மையங்களில் உடற்தகுதி தேர்வு நடத்தப்படும் என்று மாவட்ட காவல்துறை தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் இனி ‘வரதட்சணை’ பெறக்கூடாது – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
இதனால் தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் இதனை கருத்தில் கொண்டு உடற்தகுதி தேர்வுகளில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை https://www.tnusrbonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை உடற்தகுதி தேர்வின் போது எடுத்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதே போல் நாளை, தேர்வர்கள் மொபைல் மற்றும் மின்னணு சாதனங்களை எடுத்து செல்லக் கூடாது. கொரோனா பரவல் காரணமாக அனைவரும் இரட்டை முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். கிருமிநாசினி எடுத்து செல்ல வேண்டும். ஹால் டிக்கெட்டையும் மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.