சைவ சாத்திரங்கள்
- சுருக்கமாக சொல்லப்பட்ட நன்னெறி வழிகாட்டி – சாத்திரங்கள் ஆகும்.
- சாத்திரங்கள் மொத்தம் 14 ஆகும்.
சாத்திரங்கள் | எழுதியவர் | சாத்திரங்கள் | எழுதியவர் |
திருவுந்தியார் | திருவியலூர் உய்யவந்த தேவநாயானார் |
சிவப்பிரகாசம் | உமாபதி சிவனார் |
திருக்களிற்றுப்படியார் | திருக்கடவூர் உய்யவந்த தேவநாயனார் |
திருவருட்பயன் | |
சிவஞானபோதம் | மெய்கண்ட தேவநாயனார் | வினாவெண்பா | |
இருபா இருபது | அருணந்தி சிவாச்சாரியார் | போற்றப:றொடை | |
சிவஞானசித்தியார் | கொடிக்கவி | ||
உண்மைவிளக்கம் | மனவாசகம் கடந்தார் | நெஞ்சுவிடுதூது | |
சங்கற்பநிராகரணம் | உமாபதி சிவனார் | உண்மைநெறி விளக்கம் |
- மேற்கண்ட 14 நூல்களும் – மெய்கண்ட சாத்திரங்கள் (மெய்கண்டநூல்கள்) எனப்படும்.
- திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார் இயற்றப்பட்ட காலம் – 12ம் நூற்றாண்டு. ஏனைய நூல்கள் தோன்றியது – 13-14ம் நூற்றாண்டு.
சிவஞானபோதம்
- சாத்திரங்களில் தலைசிறந்த நூல் – சிவஞானபோதம்.
- சிவஞானபோதத்தின் காப்புச் செய்யுளில் வணங்கப்படும் கடவுள் – சிவபிரான், விநாயகப் பெருமான்.
- சிவஞானபோதம் என்பதன் பொருள் – கடவுளை அறிந்து தெளிதலுக்குரிய நூல்.
- சிவஞானபோதத்திலுள்ள சூத்திரங்களின் எண்ணிக்கை — 12
சூத்திரம் | சூத்திரம் கூறும் கருத்துக்கள் |
1 | பதியின் உண்மையைக் குறிக்கிறது (பதி -இறைவன், முதல்வன்) |
2 | பதியின் பொது இலக்கணம் |
3 | பசுவின் உண்மை (பசு – உயிர், ஆன்மா) |
4 | பாசம் மற்றும் பசுவின் பொது இலக்கணம் |
5 | பாசத்தின் சிறப்பிலக்கணம்(இறைவன் உயிர்களை தொழிற்படுத்துதல்) |
6 | பதியின் சிறப்பிலக்கணம் |
7 | பசுவின் சிறப்பிலக்கணம் |
8 | ஞானத்தை உணரும் முறை |
9 | ஆன்ம சுத்தி |
10 | பாச நீக்கம் |
11 | சிவப்பேற்றினை விளக்குகிறது |
12 | அணைந்தோர் தன்மை எனப்படும் ஜீவன்முத்தர் இயல்பைக் குறிக்கும் |
- சிவஞானபோதத்தின் உரைநூல்கள் — பாண்டிபெருமாள் விருத்தி, சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞானபோதமாபாடியம் (அ) திராவிட மாபாடியம் ஆகியன.
- திராவிடமாபாடியம் உரைநூலை எழுதியவர் – அப்பாடியம் விக்கிரமசிங்கபுரத்தில் உதித்தவரும், திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்தவருமான மாதவ சிவஞான சுவாமிகள்.
- சிவஞானபோதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஹாய்சிங்டன், பையட்பாதிரியார், கார்டன்மாத்யூஸ், நல்லசாமிப்பிள்ளை, டேவிட்நவமணிநாடார், சிவபாத சுந்தரம் முதலியானோர்.
- உடம்பை ‘சூன்யம்” என அழைத்தவர்கள் – பௌத்த மதத்தினர்.
- உடம்பை ‘ஆன்மா” என அழைத்தவர்கள் – உலகவாதிகள்.
- சிவஞானபோதத்தின் 4-ம் சூத்திரத்தில் மறுக்கப்படுவது – மதம்.
- சிவஞானபோதத்தின் 3-ம் சூத்திரத்தின் பொருள்கள் – 1)ஆன்மா சூன்யமன்று 2)ஆன்மா பருவுடலன்று 3)ஐம்பொறிகள் ஆன்மா அல்ல 4)கனவுடலாக நுண்ணுடம்பு ஆன்மாஅன்று 5)பிராண வாயு ஆன்மா அன்று 6)பிரம்மம் ஆன்மா அன்று 7)உடம்பு முதலான கருவிகளின் கூட்டம் ஆன்மா அன்று.
- “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுபவர், மற்றீண்டு வாராநெறி” என 8-ம் சூத்திரப் பொருளை விளக்கும் நூல் – திருக்குறள்.
- “ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” என 9-ம் சூத்திரப்பொருளை விளக்கும் நூல் – திருக்குறள்.
- “சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய்” – என 10-ம் சூத்திரப்பொருளை விளக்கும் நூல் – திருக்குறள்.
- “தம்மை உணரார் உணரார், உடங்கியைந்து தம்மில் புணராமை கேளாம்புறன்” – சிவஞானபோதம்.
சிவஞானசித்தியார்
- சிவஞானபோதத்தை தழுவி எழுதப்பட்ட நூல் – சிவஞானசித்தியார்.
- சிவஞானசித்தியாருக்கு உரைஎழுதியவர்கள் – சிவஞானயோகியர், திருவாவடுதுறை ஆதீனத்தின் 16-ம் பட்டம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆகியோர்.
- சிவஞானசித்தியர் இரு பிரிவுகளை உடையது. அவை 1)சுபக்கம் 2)பரபக்கம்
- சுபக்கம் என்பதன் பொருள் – தன் கொள்கை
- சுபக்கம் விளக்குவது – சிவஞானபோதத்தின் பொருள்நிலை.
- சுபக்கம் 328 சுபக்கம 328 விருத்தங்களால் ஆகியது.
- சுபக்கத்திற்கு உரை எழுதியவர்கள் — நிரம்ப அழகியதேசிகர், மறைஞானதேசிகர், சிவாக்கியயோகி, ஞானப்பிரகாசர்.
- பரபக்கம் என்பதன் பொருள் – பிற கொள்கைகளை மறுக்கும் கருத்து.
- பரபக்கம் 301 விருத்தங்களால் ஆகியது.
- பரபக்கத்திற்கு உரை எழுதியவர் — தத்துவப்பிரகாச தம்பிரான் சுவாமிகள்.
- சிவஞானசித்தியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – டாக்டர் கிராண்ட், நல்லசாமிப்பிள்ளை, சிவராமன்.
- சிவஞானசித்தியாரை இந்தியில் மொழிபெயர்த்தவர் – டீ.னு .ஜெயின்.
- ‘சிவஞானசித்தி சிவாகமர்த்தங்களுக்கெல்லாம் உரையாணி என செயப்பட்டு நிலவுவது” எனக் கூறியவர் – திராவிடமாபாடிய ஆசிரியர் சிவஞானசுவாமிகள்.
- “பாரில் உள்ள நூலெல்லாம் பார்த்தரிய சித்தியிலே ஓர் விருத்தபாதி போதும்“ என சிவஞானசித்தியாரைப் பற்றி அருளியவர் – குருஞானசம்பந்தர்.
இருபா இருபது
- குரு, மாணக்கனின் உரையாடல் முறையில் சைவ சித்தாந்த கருத்துக்களை கூறும் நூல் – இருபாஇருபது
- இந்நூல் 20 செய்யுட்களாலானது. வெண்பா, ஆசிரியப்பா கலந்து அந்தாதி தொடை அமையப் பாடப்பட்டது.
- இந்நூல் மெய்கண்டதேவரை வினவும் முகமாக பாடப்பட்டு உள்ளது.
திருவுந்தியார்
- இந்நூல் கி.பி.1147-ல் திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரால் இயற்றப்பட்டது.
- இந்நூல் 45 கலித்தாழிசைகளால் ஆகியது.
- இதில் முக்திமார்க்கம் பற்றி நன்கு விளக்கப்படுகிறது.
- கேட்டல் ஞானம் அனுபவஞானமாய் முதிர்வதற்கு தேவையான இருவகை யோகப் பயிற்சிகள் 1)ஆதாரயோகம் 2)நிராதாரயோகம்.
திருக்களிற்றுப்படியார்
- திருவுந்தியாரை தழுவி வந்த வழிநூல் – திருக்களிற்றுப்படியார்
- இந்நூலை எழுதியவர் – திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனார் (திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரின் மாணக்கர்) காலம் கி.பி.1177.
- இந்நூல் 100 வெண்பாக்களால் ஆகியது.
- உபநிடதம், பிராமணங்கள், பகவத்கீதை ஆகிய மூன்றும் முதன்மையான பிராமண நூல்கள் என இந்நூல் கூறுகிறது.
உண்மைவிளக்கம்
- சிந்தாந்த உண்மையை விளக்குவது – உண்மைவிளக்கம்
- இந்நூல் 53 வெண்பாக்களால் ஆனது.
- ‘மெய்க்கண்ட சந்தான அனுபவத்திரட்டு “ எனப்படுவது – உண்மைவிளக்கம்.
- மெய்கண்டதேவரை அவரது மாணக்கர் வினவ அவர் விடை கூறி வருவது போல் வைத்து ஆக்கப்பட்ட நூலாகும்.
- சைவ சாத்திரங்களை கற்றுணர விரும்புவோர் இந்நூலை முதற்கண் ஓதி உணர்தல் வேண்டும்.
சிவப்பிரகாசம்
- சிவஞானபோதத்தின் சார்புநூல் — சிவப்பிரகாசம்
- இதில் சைவநூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் கூறப்பட்டுள்ளது.
- இது பொது, சிறப்பு என இருவகைப்படும்.
- இந்நூல் 100 விருத்தங்களை கொண்டது.
- இது பதி, பசு, பாச இலக்கணம் பற்றி விளக்குகிறது.
- ‘புறச்சமயத்தவருக்கு இருளாய்” ‘தொன்மைய ஆம் எனும் எவையும் நன்றாக” ‘நூலெனும் எவையும் தீதாகா” ஆகிய பாடல்வரிகள் உள்ள நூல் – சிவப்பிரகாசம்.
திருவருட்பயன்
- ‘செந்தமிழ் பொதுமறையாகிய திருக்குறளுக்கு ஒழிபு” என கொள்ளத்தக்க நூல் – திருவருட்பயன்.
- இது பத்து அதிகாரங்களும், 100 பாடல்களும் கொண்டது.
வினா வெண்பா
- இந்நூல் 13 வெண்பாக்களால் ஆகியது.
- உமாபதி சிவனார் தம் ஆசியராகிய மறைஞானசம்பந்தரிடம் சாத்திர உண்மைகளை கேட்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.
போற்றிப:.றொடை
- தமக்கு சிவஞானம் நல்கிய குருமூர்த்தியை வாழ்த்தி பாடிய பாடல்கள் அடங்கியது.
- உயிர்களுக்கு திருவருள் தொன்றுதொட்டு செய்துவரும் உபகாரங்களை எடுத்துக் கூறும் நூல் – போற்றிப:.றொடை
- ஞானதீக்கையின் பயனையும், திருவைந்தெழுந்தின் ஓதும் முறையையும் இந்நூல் உரைக்கிறது.
கொடிக்கவி
- ஒரு கட்டளை கலித்துறை மற்றும் நான்கு வெண்பாக்களும் அடங்கியது.
- ஏறாத தில்லைக்கொடியை ஏற்றிய பாடல்கள்.(மொத்தம் – 5 பாடல்கள்)
நெஞ்சுவிடுதூது
- ஆசிரியர் உமாபதிசிவனார் தம் குருவான மறைஞானசம்பந்தரிடம் மாலை வாங்கி வரும்படி தனது நெஞ்சை தூது விடும் முறையில் அமைய பெற்ற நூல்.
உண்மைநெறி விளக்கம்
- தசகாரியங்களை விளக்குகிறது. முதலில் இதை எழுதியவர் உமாபதிசிவம் என கூறப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் இதை எழுதியவர் – சீர்காழிதத்துவநாதர் என்று அறியப்பட்டது.
- இதனுடைய மூலநூல் – துகளறுபோதம்.
- துகளறுபோதத்தை இயற்றியவர் – சீர்காழிச் சிற்றம்பலநாடிகள்
- பரமுத்தி நிலையை எய்தும் நிலைகளை ‘ப10தப்பழிப்பு’ முதலாக ‘பரமானந்த அவசம்” வரை 30 அவதாரம் எனக் கூறுவது -துகளறுபோதம்
- இதில் முதல் ஏழு பாச அவதாரம், பின் 15 பசு அவதாரம், இறுதி 8 பதி அவதாரம் எனவும் வகை செய்யப்பட்டு உள்ளது.
- மெய்கண்ட நூல்களுடன் சேர்த்து அச்சிட்டு வழங்கும் நூல் – துகளறுபோதம்.
சங்கற்ப நிராகரணம்
- வேற்று சமயங்களின் சந்தேக கருத்துக்களை சங்கற்பம் எனக் கூறி நிராகரிக்கிறது.
- பரமுத்தி நிலையை அடையத் தலைப்படும் உயிர் மேற்கொள்ள வேண்டிய ஞான செய்திகளை விளக்குகிறது.
- இந்நூல் 13 அகவற்பாக்களையும்ää ஒரு வெண்பாவையும் உடையது.
- மெய்கண்ட நூல்களுள் இறுதி 8 நூல்களை எழுதியவர் – கொற்றவன்குடி உமாபதி சிவனார். இவருடைய ஆசிரியரான கடந்தை மறைஞான சம்பந்தர் எழுதியதாக கூறப்படும் நூல் — சதமணிக்கோவை.
- சாலிவாகன ஆண்டு – 1235 (கி.பி.1313)
- ‘சிவப்பிரகாசத்தின் பரபக்கம்” என அழைக்கப்படுவது – சங்கற்பநிராகரணம்.
- ‘சிவாத்துவித சைவம்” என அழைக்கப்படுவது – காரண பரிணாமவாதம்.
- ‘சுத்த சைவம்” என அழைக்கப்படுவது – சைவ வாதம்.
PDF Download
TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download
TNPSC Current Affairs in Tamil 2018
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
சைவ சித்தாந்தம் தொடர்பாக அருமையான விளக்கம் மிகவும்
மாணவர்கள் அனைவரும் கற்று உணர வேண்டிய நூல்கள்
நன்றி