TNPSC தேர்வெழுத உள்ளோர் கவனத்திற்கு – தமிழ் மொழியில் 40% மதிப்பெண் கட்டாயம்!
தமிழக அரசுபணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெறுவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழித்தேர்வு:
தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த போட்டித்தேர்வுகள் அந்த துறைகளுக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் அடிப்படையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்களாக போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. அதனால் தற்போது 2022ம் ஆண்டுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டுள்ளது.
அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க டிச.27 கடைசி நாள்!
அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசு துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமிக்கும் நோக்கில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 40 மதிப்பெண்கள் பெறவில்லை என்றால் தேர்வின் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் மொழித் தாளானது, தகுதி மற்றும் மதிப்பீட்டு தாளாக அமைகிறது. தமிழ் மொழித்தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளியில் 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி – 3 நாட்கள் விடுமுறை!
தற்போது குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு 2022ம் ஆண்டு பிரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெளியாகும் என்று TNPSC தெரிவித்துள்ளது. இதில் குரூப் 2 தேர்வில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் கொண்ட தேர்வுகளில், தமிழ் மொழித் தகுதித் தேர்வானது முதன்மைத் தேர்வுடன் விரிந்துரைக்கும் வகையிலான தேர்வாக அமைக்கப்படும். அதே போல குரூப் 4 தேர்வுகளில் பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக அமைக்கப்படும். இதில் தமிழ்மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு தேர்வானது, 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும்.