தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுவது குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் 4 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இந்த ஆண்டு விஏஓ, கிராமப் பணியாளர் உள்ளிட்ட துறைகளின் கீழ் 6244 காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளது. மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
அதாவது, TNPSC குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சிகள் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மைய அலுவலகங்களிலும் சிறந்த மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்றுநர்கள் வாயிலாக வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கும் தேர்வாளர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பினை முறையாக பயன்படுத்தி தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை பெறும் வாய்ப்பை பெறுமாறு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
IFCI இந்திய தொழில்துறை நிதிக் கழகத்தில் வேலை – டிகிரி முடித்தவர்களுக்கான வாய்ப்பு!