TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள்.. வெளியாகும் தேதி இதுதான் – தேர்வர்களுக்கு முக்கிய அப்டேட்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் TNPSC குரூப் 4 தேர்வானது சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் வெற்றிகரமாக நடைபெற்றது. பல லட்சம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு:
வி.ஏ.ஒ, டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பல்வேறு பணியிடங்களுக்கான குரூப் 4 எழுத்துத் தேர்வானது கடந்த ஜுலை 24ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் மூலம் 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுதலாம் என்பதால், 22 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி உள்ளனர். தேர்வின் உத்தேச விடைத்தாள் ஆகஸ்ட் மாதம் வெளியானது.
Follow our Instagram for more Latest Updates
அறிவிப்பு வெளியான அன்றே, குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாத இறுதியில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரையும் வெளியாகவில்லை. தேர்வு நடைபெற்று 3 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இதனை போக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் ஜாக்பாட்.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்தும் அரசு – சூப்பர் செய்தி!
Exams Daily Mobile App Download
டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள தேர்வு முடிவுகள் வெளியீடு தேதி தொடர்பான அட்டவணையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வு எழுதிய லட்சக்கணக்கான தேர்வுகளுக்கு இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த மேலும் தகவல்களுக்கு எங்கள் வலைப்பதிவை பின் தொடரவும்.