TNPSC அரசு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

0
TNPSC அரசு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC அரசு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு - இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!
TNPSC அரசு போட்டித் தேர்வர்கள் கவனத்திற்கு – இலவச பயிற்சி வகுப்புகள் ஆரம்பம்!

அரசு போட்டி தேர்வுக்கு தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான நபர்கள் தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு உதவி புரியும் வகையில் நேற்று முதல் அரியலூர் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது.

இலவச பயிற்சி வகுப்பு காலிப்பணியிடம்

கொரோனா காரணமாக கடந்த ஆண்டு அனைத்து அரசு போட்டி தேர்வுகள் நடைபெறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதால் அனைத்து அரசு போட்டித் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அதனால் தற்போது படித்து முடித்த மாணவர்கள் மற்றும் ஏற்கனவே அரசு போட்டி தேர்வுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டிருப்பவர்கள் என லட்சக்கணக்கான போட்டியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதனால் போட்டிகள் மிகவும் கடுமையாக இருக்கும். இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2,2A , குரூப் 4 ஆகிய போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி – புதுவை முதல்வர் அறிவிப்பு!

அதன்படி குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் வருகிற மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று TNPSC தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் சாா் ஆய்வாளா் மற்றும் இரண்டாம் நிலை காவலா் போன்ற பணிகளுக்கான தேர்வு தேதிகளை விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அனைத்து போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் அரியலூர் மாவட்டத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நேற்றிலிருந்து (டிச.20) நடைபெற்று வருகிறது

தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை? மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!

இந்த பயிற்சி வகுப்பில் அனைவருக்கும் புரியும் விதத்தில் போட்டி தேர்வுக்கு தேவையான அனைத்து பாடங்களும் எடுக்கப்படும். இந்த பயிற்சி வகுப்புபானது அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. அத்துடன் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு இலவசமாக பாட குறிப்புகள் வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் நேரில் சென்று கலந்து கொள்ளலாம். இந்த அருமையான வாய்ப்பை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தேர்வர்கள் அனைவரும் பங்கு பெற்று பயன்படுத்தி கொள்ளலாம். அத்துடன் தொடர்ந்து இந்த பயிற்சி வகுப்புகளை பின்பற்றுவதன் மூலமாக அரசு போட்டி தேர்வுகளில் விரைவில் வெற்றி பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!