தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை? மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை அடுத்து முதல் கட்டமாக 9 – 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அடுத்த கட்டமாக தொடக்க மற்றும் நடுநிலை வகுப்புகளும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது முழுவதுமாக பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதால் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சாலைகள் வெள்ளக்காடாக மாறியது. மேலும் பள்ளிகளிலும் மழைநீர் புகுந்தது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு இரவு ஊரடங்கு உத்தரவு – புதிய கட்டுப்பாடுகள்!
அதன் பிறகு மழை குறைந்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் திறப்பட்டு வழக்கம் போல செயல்பட தொடங்கியது. தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடச்சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் கட்டாயம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வானது டிசம்பர் 24 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி வெள்ளிக்கிழமை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது – ஷாக் அறிவிப்பு!
ஆண்டுதோறும் பள்ளிகளில் டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடைபெற்று முடிந்தவுடன் 10 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும். பிறகு புத்தாண்டு முடிந்த பிறகு பள்ளிகள் திறக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் விடுமுறை அளிக்கப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 25 ஆம் தேதி முதல் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை என மொத்தம் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.