TNPSC குரூப் 2, 4 VAO தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம்! முழு விபரம் இதோ!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் நடத்துவதற்கான திட்டமிடல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் தற்போது தேர்வுக்கான நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகள்:
தமிழக அரசின் பணியாளர்களை குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 ஆகிய தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் எழுத்துத்தேர்வுகள் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்கிறது. இதன் மூலம் பணிக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் அரசு பணிக்கு தயாராகும் நபர்கள் TNPSC தேர்வுக்கான அறிவிப்புகளை கவனமாக பின்பற்றி வருகின்றனர். கடந்த 2020 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கொரோனா தொற்றின் பரவல் பாதிப்புகள் காரணமாக TNPSC தேர்வுகள் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் திரு.கா.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம், தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்ட தலைநகரங்களில் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வுக்கான துறை தேர்வுகள் நடைப்பெற்று வருகிறது. இந்த துறை தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் மே மாதம் 4,5 6 ஆகிய தேதிகளில் டிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு திட்டமிட்டபடி நடைப்பெறும்.
இனி வரும் காலங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைப்பெறும் கால நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுநாள் வரை காலையில் 10 மணி தொடங்கி 1 மணி வரை நடைப்பெற்று வந்த தேர்வுகள், இனிமேல் காலை 9.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.30 மணி வரை நடைப்பெறும், மாலை தேர்வுகள் வழக்கம் போல் 2 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைப்பெறும்.தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக தேர்வு கூட நுழைவு கதவுகள் பூட்டப்படும். எனவே தேர்வு நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாகவே தேர்வர்கள் வந்துவிட வேண்டும். அதற்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்.