TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆனது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய் மொழித் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
TNPSC தேர்வுகள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட துறைத்தேர்வுகள், மே.2021 அறிவிக்கை எண்: 08/2021. நாள்: 29.04.2021 தொடர்பான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் (Viva-voce test relating to Second and Third class Language tests) 10.11.2021 முதல் 17.11.2021 வரை ஏழு நாட்கள் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், மதுரை மற்றும் நாகர்கோயில் ஆகிய ஏழு மையங்களில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வரும் நாட்களில் தமிழகத்தில் எதிர்பார்க்கப்படும் அதகன மழை மற்றும் வானிலை நிலைய இவப்பு எச்சரிக்கை காரணமாகவும், தேர்வர்களின் நலனைக் கருத்தில்கொண்டும், 10.11.2021 முதல் 13.11.2021 ஆகிய நான்கு நாட்களில் மட்டும் நடைபெறவிருந்த இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழித் தேர்வுகளுக்கான வாய்மொழித் தேர்வுகள் ((Viva-voce test relating to Second and Third class Language tests)ஓத்திவைக்கப்படுகின்றன. இந்த நான்கு நாட்களில் நடைபெறவிருந்த நேர்காணல் தேர்வுகளுக்கான தேது தேர்வாணையத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.