தமிழக அரசில் 8 வது படித்தவர்களுக்கான அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்க..!
திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் (TNHRCE) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Office Assistant, Night Watchman & Driver பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Office Assistant, Night Watchman & Driver |
பணியிடங்கள் | 05 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
வெளியிட்டுள்ள அறிவிப்பில், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் இரவுக் காவலர் பணிக்கு என்று மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Office Assistant – 03
- Night Watchman – 01
- Driver – 01
TNHRCE தகுதி விவரங்கள்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் கட்டாயம் 8 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் LMV License வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் கட்டாயம் நல்ல உடற்தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரங்கள்:
- Office Assistant, Night Watchman பணிக்கு தேர்வாகும் பணியாளர் மாத ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.
- Driver பணிக்கு தேர்வாகும் பணியாளர் மாத ரூ.19,500 முதல் ரூ.62,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள்.
- மேலும் இப்பணிகளுக்கு என வழங்கப்படும் கூடுதல் தொகை பற்றி அறிவிப்பில் பார்க்கவும்.
TNHRCE வயது விவரங்கள்:
- 01.07.2021 அன்றைய நாளின் படி, பதிவுதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- மேலும் அரசு விதிமுறைகளின்படி வயது தளர்வுகள் அளிக்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
TNHRCE தேர்வு முறை:
மேற்கண்ட பணிகளுக்கு பதிவுதாரர்கள் நேர்முகத் தேர்வின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பங்களை தயார் செய்து 30.04.2022 அன்று மாலை 5.30 மணிக்குள் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாளுக்குள் வராத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.