தமிழ் தெரிந்தவர்களுக்கு மாதம் ரூ.41800/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
ஓதுவார் பணியிடங்களை நிரப்ப இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்தாலம்மன் திருக்கோயிலில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 20.07.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
திருக்கோயில் வேலைவாய்ப்பு விவரங்கள்:
ஓதுவார் பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனத்தில் நடத்தப்படும் தேவார பாடசாலையில் மூன்று ஆண்டுகள் பயின்றமைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.13200-41800/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க 20.07.2023 கடைசி நாள் என்பதால், தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.