தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.31500/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அன்னதான திட்டத்தில் உள்ள துப்புரவு பணியிடங்களை நிரப்ப இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, விண்ணப்பிக்கும் விவரங்கள் அனைத்தும் கீழே பகிரப்பட்டுள்ளன. அதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு 17.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | துப்புரவு |
பணியிடங்கள் | 1 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 17.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TNHRCE காலிப்பணியிடங்கள்:
துப்புரவு – 1 பணியிடம்
கல்வி தகுதி விவரங்கள்:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இறை நம்பிக்கை உடையவராகவும்
இருத்தல் வேண்டும்.
NHAI நெடுஞ்சாலை ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
Follow our Instagram for more Latest Updates
துப்புரவு வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயது நிறைவடையதவராகவும்
இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
துப்புரவு – ரூ.10000-31500/-
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை உதவி ஆணையர், இருக்கங்குடி மாரியம்மன் கோயில், இருக்கங்குடி, விருதுநகர்-626202 என்ற முகவரிக்கு 17-மார்ச்-2023 அன்று அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.