பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் – செப் 28ல் வெளியீடு !!!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்து உள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று மாலை வெளியிடப்படும் என்று தமிழக உயர்கல்வி துறை அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலையுடன் இணைப்பில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் இந்த கல்வி ஆண்டிற்கான பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பித்து உள்ள மாணவர்கள் தற்போது தரவரிசை பட்டியல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து பணிகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படுகிறது. மேலும் அனைத்து பணிகளுக்குமான அவகாசமும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பணிகளும் நடைபெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.
பதிவுகள் அனைத்தும் ஆன்லைனிலேயே முடிந்த நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடியடையவில்லை தற்போது தான் இறுதி கட்டத்தினை எட்டி உள்ளது. இதனால் முன்னதாகவே வெளியாக வேண்டிய தரவரிசை தாமதமாக தற்போது (செப் 28) வெளியாக உள்ளது. இதனை மாணவர்கள் என்ற முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்