தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு! அம்பேத்கர் சட்டப்பல்கலை.!!

0
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு
தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு

தமிழகத்தில் முதல் முறையாக ஆன்லைனில் வைவா தேர்வு! அம்பேத்கர் சட்டப்பல்கலை. !!

தமிழகத்தில் முதன்முறையாக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வழியாக வாய்மொழித்தேர்வு (Viva Voce) நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பின்னர் மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்குப் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து தெரியவில்லை. இதன் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்து.

போலி ஆராய்ச்சி அறிக்கை சமர்ப்பித்தவர்களுக்கு, வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு வழங்க கூடாது! – UGC அதிரடி 

இதனால் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள், கடைசி செமஸ்டர் தேர்வு முடித்து வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வு முடித்தால் தான் கல்லூரியை விட்டு வெளியேற முடியும். அப்போது தான் மேற்படிப்பு செல்ல முடியும், வேலைவாய்ப்பு பெற முடியும். இதே போல் ஆராய்ச்சி படிப்பு மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் Viva Voce எனப்படும் வாய்மொழித்தேர்வை ஆன்லைனில் நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளநிலை, முதுநிலை இறுதியாண்டு மாணவர்களும், ஆராய்ச்சி மாணவர்களும் ஆன்லைனிலேயே வாய்மொழித்தேர்வை முடித்துக் கொள்ள முடியும்.

கலாச்சார நட்பு கழகத்தில் பணி 2020 – அரசு பணி

மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் ஜூம் போன்ற ஆன்லைன் வீடியோ செயலி மூலம் வாய்மொழித்தேர்வில் பங்கேற்கலாம். அவர்களுடைய பேராசிரியர்களும் ஆன்லைனிலேயே கேள்வி கேட்பர். மாணவர்கள் தேர்ச்சி பெற்றால், பேராசிரியர்கள் அதற்கு உரிய சான்றை அளிப்பர்.

இவ்வாறு வாய்மொழித்தேர்வு ஆன்லைனிலேயே முடித்துக் கொள்வதால், சீக்கிரம் தங்களது பட்டம், ஆராய்ச்சி பட்டத்தை பெற்று விட முடியும். இதனால், மாணவர்கள் மத்தியில் ஆன்லைன் வாய்மொழித்தேர்வுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முதற்கட்டமாக சோதனை முயற்சி செய்த பிறகு, ஆன்லைன் வாய்மொழித்தேர்வு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்திய ரயில்வேயில் கண்காணிப்பாளர் பணியிடங்கள்

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் மொழிப்பல்கலைக்கழகம் மற்றும் வேறு மாநிலங்களில் சில பல்கலைக்கழகங்களில் மட்டுமே இந்த ஆன்லைன் வாய்மொழித்தேர்வை கையில் எடுத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட எந்தவொரு பல்கலைக்கழகமும் இந்த முயற்சியில் ஈடுபடவில்லை. அந்த வகையில், தமிழகத்தில் முதல் முறையாக அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் மட்டுமே ஆன்லைன் வாய்மொழித்தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!