தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் – எச்சரிக்கும் வானிலை மையம்!

0
தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் - எச்சரிக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் - எச்சரிக்கும் வானிலை மையம்!
தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் – எச்சரிக்கும் வானிலை மையம்!

தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் வானிலை மையம் தகவல். அடுத்த ஒரு வாரத்திற்கு மழை கொட்டித்தீர்க்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்:

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவ.30) தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளைய தினம் (டிச.01 மற்றும் 02) மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுவையிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிச.6ம் தேதி மிகப்பெரிய தனியார் வேலைவாய்ப்பு முகாம் – உடனே விண்ணப்பியுங்கள்!

அதனைத் தொடர்ந்து டிசம்பர் 3ம் தேதி ராணிப்பேட்டை, திருவாரூர், திருப்பத்தூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் டிசம்பர் 4ஆம் தேதி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஆந்திர கடலோர பகுதி தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு வங்க கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று பலத்த வேகத்தில் வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!