பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 பேர் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை !!!
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 47,150 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் !!!!
கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு, டிஎன்பிஎஸ்சியில் விதித்தது போன்றே, வாழ்நாள் தடையை ஆசிரியர் தேர்வு வாரியம் விதித்துள்ளது.
1,058 காலிப்பணியிடங்கள்:
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக 1, 058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, 2017 செப்டம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 2 ஆயிரம் பேருக்கு சான்று சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை:
199 பேரும் இடைத்தரகர்களிடம் பல லட்சம் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் 199 பேருக்கு வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடைவிதித்துள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |