தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து போக்குவரத்துக்கு தடை? ஷாக் ரிப்போர்ட்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஊரடங்கு அமல்?
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தோற்று காரணமாக கொரோனா 2வது அலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட பின்னர் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இந்த ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக இருந்த போதிலும், உயிரிழப்புகள் அதிக அளவில் நிகழவில்லை. இதற்கிடையில் நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக ஓமைக்ரானை தொடர்ந்து கொரோனா தொற்று வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் – பொதுமக்கள் அடுக்கடுக்கான புகார்!
அந்த வகையில் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. அதன்படி சென்னையில் நேற்று ஒரே நாளில் 6,186 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனா தொற்று அதகரித்து வருவதால் கொரோனா 2வது அலையை விட 3வது அலை வேகமெடுத்து பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த மே மாதம் சென்னையில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதனால் தமிழகத்தில் தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்குடன் வார இறுதி முழு முடக்கம் அமல்? அரசு ஆலோசனை!
ஏற்கனவே அமலில் இருக்கும் சில கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில தினங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் கூட்டம் கூடும் வகையில் உள்ள கடைகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளது. மேலும் நீண்ட தூர பேருந்து பயணத்திற்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், இந்த கட்டுப்பாடுகள் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு மட்டும் அமல்படுத்தலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.