ஆசிரியர் கலந்தாய்வு விரைவில் நடைபெறுமா ???????
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வானது விரைவில் நடத்தப்பட வேண்டும் என வைக்கப்பட்டுள்ளதால் விரைவில் அவர்களுக்கான கலந்தாய்வானது நடத்தப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று அதன் மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவது, பதவி உயர்வு வழங்குவது போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளுவது என பல்வேறு நடவடிக்கைகள் செய்யப்படும்.
ஆனால் இந்த முறை கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த செயல்பாடுகள் அனைத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயல்பாடுகள் எல்லாம் இந்த காலத்திலேயே நடைபெற்றால் மட்டுமே பள்ளிகள் திறந்த உடன் கற்பித்தல் பணியினை மேற்கொள்ள இயலும்.
மேலும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் நியமனம் ஆகியவற்றினை மட்டுமாவது நடத்தினால் உதவிகரமாக இருக்கும் என ஆசிரியர்கள் கழக ஒருங்கிணைப்பாளர் தெரிவித்து உள்ளார். இன்றைய சூழலில் இந்த கலந்தாய்வு பணிகளை மேற்கொண்டால் மட்டுமே பள்ளிகள் திறந்த உடன் கற்பித்தல் பணிகளை மட்டும் விரைவில் செயப்படுத்தலாம் என்பதனால் விரைவில் இந்த கலந்தாய்வு நடைபெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்