05ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தமிழக அரசு வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையில் (TN SWD) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Cleaner பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் முடிவடைய இன்னும் ஒரு நாள் (15.12.2023) மட்டுமே மீதமுள்ளது. எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
சமூகப்பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள் 2023:
- Cleaner பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே வேலூர் மாவட்ட சமூகப்பாதுகாப்பு துறையில் (TN SWD) காலியாக உள்ளது.
- 1.07.2023 அன்றைய தேதியின் படி, 40 வயது பூர்த்தி அடையாத நபர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.
- 05ம் வகுப்பை அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் Cleaner பணிக்கென பெறப்பட்டு வருகிறது.
- Cleaner பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தினக்கூலி விதிமுறை படி மாத ஊதியம் வழங்கப்படும்.
இந்தியன் வங்கி Data Protection Officer வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
- இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TN SWD விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (15.12.2023) கடைசி நாள் என்பதால் இன்றே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.