தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் முழுவதுமாக திறப்பு – தயார் நிலையில் மாணவர்கள்!
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 1ம் தேதி முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நேரடி வகுப்புக்கு அனுமதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நேரடி வகுப்பு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. முதல் அலையை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் ஊரடங்கு தீவிரமாக்கப்பட்டது.
தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆன்லைன் மூலம் படங்களை கவனித்து வந்த தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி செல்ல நேரம் கூடி வந்துவிட்டது.
தமிழகத்தில் 4% பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி – யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை!
இதனடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிக்கு செல்லாமல் ஆன்லைன் வகுப்புகளை மட்டும் எதிர்கொண்டு வந்த மாணவ-மாணவிகள் வரும் காலங்களில் பயிற்சியுடன் கூடிய படிப்பை எதிர்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தங்களது நேரத்தை படிப்பிற்கு செலவிட வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசு வைத்தான் பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு கணினி பயிற்சி, கராத்தே பயிற்சி, ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, பேச்சு பயிற்சி, தமிழ்- ஆங்கில கையெழுத்து பயிற்சி, நீதிநெறி கதைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தனது சொந்த செலவில் அளித்து வருகிறார்.