தமிழக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நாளை (09.10.2021) உள்ளாட்சி தேர்தல் 2 ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் :
தமிழகத்தில் அரசின் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்றது. அதன் பிறகு 9 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை முடிவடையாததால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. விரைவில் வார்டுகளை வரையறை செய்து ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் உள்ளாட்சி தேர்தல் நடைபெற தேவையான பணிகளை மேற்கொண்டது.
தமிழகத்தில் 4% பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணி – யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை!
உள்ளாட்சி தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. மேலும் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின் 9 மாவட்டங்களுக்கும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கும் தமிழக அரசு பொது விடுமுறையை அறிவித்துள்ளது. 9 மாவட்டங்களிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 6ம் தேதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அதிரடி அறிவிப்பு – தலைமை செயலர் உத்தரவு!
அதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.