தமிழக முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் – அரசுக்கு கோரிக்கை!!
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊதியத்தில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழக அரசு பணிகளில் இருக்கும் ஊழியர்களுக்கு அவர்களது பட்டப்படிப்புக்கேற்றபடி ஊக்க ஊதிய உயர்வு தொகை வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக இந்த உயர் கல்வி ஊதிய உயர்வை ரத்து செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து போட்டித்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து ரேங்க் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆசிரியர்களுக்கு உயர் கல்வி அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் ஊக்க ஊதிய தொகையை ரத்து செய்தது. இந்நிலையில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் சங்கத்தின் மாநில தலைவர் மணிவாசன் தலைமையில் நடைபெற்றது.
10ம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ – மாநில அரசு அறிவிப்பு!!
இக்கூட்டத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊக்க ஊதிய உயர்வு தொகையில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும். அதன்படி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு தொகை நடைமுறையை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களின் தகுதிக்கேற்றபடி பதவி உயர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.