பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு குறித்து முதற்கட்ட அறிக்கை தாக்கல் !!!
தமிழகத்தில் பள்ளிகளை திறப்பு மற்றும் பாடத்திட்டம் உறைப்பு குறித்து ஆராய பள்ளிக்கல்வி துறை தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழு தங்களின் முதற் கட்ட அறிக்கையினை அரசிடம் தாக்கல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அடுத்த கல்வி ஆண்டுகள் தொடங்கி ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளன. மத்திய அரசு 21 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அனுமதி அளித்து இருந்தாலும் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் பள்ளிகள் திறப்பு தாமதவாதல் பாடத்திட்டங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா அல்லது பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதனால் இது குறித்து ஆராய பள்ளிக்கல்வித்துறை தலைவர் தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட அறிக்கை தாக்கல் :
தமிழக அரசின் இந்த 16 பேர் கொண்ட குழு ஆனது தற்போதைய சூழலினை ஆராய்ந்து தனது முதற்கட்ட அறிக்கையினை சமர்ப்பித்து உள்ளது. மேலும் மத்திய அரசிடம் இருந்து வரும் வழிமுறைகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றினை பொறுத்து இறுதி அறிக்கையினை விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இந்த அறிக்கையினை பொறுத்தே தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பாடத்திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும் என்பதனால் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்