மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு – அமைச்சர் பேட்டி
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது.
பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. இன்னும் திறக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் தற்போது திறக்கப்பட சாத்தியமில்லை என்று தமிழக பள்ளிக்கல்வி அமைச்சகம் கூறியிருந்தது.
தற்போது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில் கொரோனா பாதிப்பு குறைந்தவுடன் இந்தாண்டு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களை போலவே 8, 11 வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் எதிராகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்