இந்த கல்வியாண்டிலும் 10, 12 பொதுத்தேர்வுகள் ரத்தா ??? – அமைச்சர் விளக்கம்

0
இந்த கல்வியாண்டிலும் 10, 12 பொதுத்தேர்வுகள் ரத்தா - அமைச்சர் விளக்கம்
இந்த கல்வியாண்டிலும் 10, 12 பொதுத்தேர்வுகள் ரத்தா - அமைச்சர் விளக்கம்

இந்த கல்வியாண்டிலும் 10, 12 பொதுத்தேர்வுகள் ரத்தா ??? – அமைச்சர் விளக்கம்

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற விவாதம் அதிக அளவில் பேசப்பட்டு வரும் நிலையில் இது குறித்து தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

பள்ளிகள் மூடல் !

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. அடுத்த கல்வி ஆண்டு தொடங்கினாலும் தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

தொற்றின் தாக்கம் தனியாத வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டு உள்ளது. அடுத்த வருடத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும், டிசம்பர் மாதத்திற்கு பிறகு பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு தான் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பலதரப்பட்ட தகவல்கள் வெளியாகின்றன.

பொதுத்தேர்வுகள் ரத்தா ??

தற்போது தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால் அவ்வாறு ரத்து செய்யும் திட்டம் இல்லை என்றும், அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்துக்களை கேட்டறிந்து அதன்படி முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!