தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் கடந்த ஆண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கூட நடத்தப்படவில்லை. மேலும் பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் கற்பிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு இணைய வழியிலும், அரசு பள்ளிகள் கல்வி தொலைக்காட்சி வழியாகவும் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாகவும் பாடங்களை நடத்தியது.
தமிழகத்தில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணி – வட்டார கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!!
பாடங்கள்:
இந்நிலையில் உயர்வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்கவிருப்பதால் முதல் கட்டமாக ஜனவரி 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புக்ளுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. பின்னர் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை வகுப்புக்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு பாடங்களில் இருந்து 30% குறைக்கப்பட்டுள்ளது.
தேர்வு ஆலோசனை:
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3 முதல் 21ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மே மாத இறுதியில் நடத்துவதற்கு வாய்ப்பிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் அறிவித்துள்ளது. மேலும் 11ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வை பள்ளிகள் அளவிலேயே நடத்துவதற்க்கு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்