தமிழகத்தில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பணி – வட்டார கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!!
தமிழக தொடக்க கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணி இடங்கள் நியமனத்திற்கு 3% வட்டார கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க உள்ளதால் அவர்களின் பட்டியலை தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
வட்டாரக்கல்வி அலுவலர்:
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணியாற்றுபவர்கள் வட்டாரக்கல்வி அலுவலராக நியமிக்கப்படுவார்கள். பள்ளிகளை கண்காணிக்கும் நோக்கில் வட்டார கல்வி அலுவலர் பணி உருவாக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பது தான் வட்டார கல்வி அலுவலரின் பணியாகும்.
6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – வருகைப்பதிவு குறைவு!!
பதவி உயர்வு:
வட்டார கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலமாக தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணிக்கு மூன்று சதவீதம் வட்டார கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு மூலமாக நியமிக்கப்பட உள்ளனர். இது தொடர்பாக தமிழக தொடக்க கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தமிழக பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணி இடஙக்ளுக்கு பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப்பணி இடஙக்ளுக்கு 3% வட்டார கல்வி அலுவலர்கள் முன்பு உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடம் நிரப்பப்படும்.
இப்பணிக்கு 1.1.2021 நிலவரப்படி, தகுதி வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்கள் தொடர்பான விவரங்களை பெற்று பட்டியலை பள்ளிக்கல்வி இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும். தலைமை ஆசிரியர் பணிக்கு 1.1.2021 நிலவரப்படி, 31.12.2008க்கு முன்பு பணியில் சேர்ந்த தகுதி வாய்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விவரங்களை தொடக்க கல்வி இயக்கக்கத்தில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்