பாடப்புத்தகங்கள் குறைப்பு !!! – கல்வித்துறை அதிரடி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல திட்டங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது.
இதனால் தேர்வுகள் யாவும் ரத்தான நிலையில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கையை முன் வைத்தனர். அதனால், பாடத்திட்டங்களை குறைக்க அரசு ஒரு குழுவை அமைத்தது. அவர்கள், மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை குறைக்க நடவடிக்கைகளை எடுத்து வந்தது இது குறித்து அரசு தரப்பிடம் இருந்து ஒரு அறிவிப்பு வந்துள்ளது. அதில்,
- 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த வருடம் சமூக அறிவியலில் 2 பாடபுத்தங்கங்கள் இருந்தது.அதனை ஒரு புத்தகமாக குறைத்து உள்ளனர்.
- அதே போல் 11 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2 பாடபுத்தகங்களாக இருந்த வணிகவியல் 1 பாடபுத்தகமாக மாற்றப்பட்டு உள்ளது.
- இது மட்டும் அல்லாமல், கணித வேதியல் மற்றும் இயற்பியல் பாடங்களை தவிர்த்து 2 பாடபுத்தங்களாக ஆக இருந்த புத்தகங்கள் 1 புத்தகமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி திறப்பு உறுதியானால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |