அரசுத்துறைகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு வழக்கு – நீதிமன்றம் தள்ளுபடி!!

0
அரசுத்துறைகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு வழக்கு - நீதிமன்றம் தள்ளுபடி!!
அரசுத்துறைகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு வழக்கு - நீதிமன்றம் தள்ளுபடி!!
அரசுத்துறைகளில் தமிழ்வழி இடஒதுக்கீடு வழக்கு – நீதிமன்றம் தள்ளுபடி!!

தமிழக அரசுத்துறைகளில் பின்பற்றப்படும் தமிழ்வழி இடஒதுக்கீடு குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அதனை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

இடஒதுக்கீடு வழக்கு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC), சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) என பல்வேறு அரசுத்துறை பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு (PSTM) இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மாநில மொழிக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இடஒதுக்கீடு முறை தற்போது அமலில் உள்ளது.

தமிழகத்தில் பிப்., 25 முதல் பேருந்துகள் ஓடாது – போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்!!

இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு பெறுவதில் பழைய தகுதி நிர்ணயத்தையே தொடருமாறு கோரப்பட்டு இருந்தது. அதாவது பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்திருந்தாலும் அவர்களுக்கும் PSTM இடஒதுக்கீட்டில் இடம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாநில மொழிக்கே அதிகளவு முக்கியத்துவம் தரப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், கிராமப்புற ஏழை மாணவர்கள் பயன்பெறவே இது அமலில் உள்ளதாக கூறினார். பின்னர் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!