தமிழகத்தின் மாவட்டங்களில் வரும் நாட்களுக்கான மின்தடை குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழக அரசு மக்களுக்கு இடையூறு இல்லாமல் தகுந்த முன்னறிவிப்புகளுடன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடையை மேற்கொண்டு வருகிறது. மின்வாரியத்தின் இயந்திரங்களில் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் மின் பயன்பாடு உள்ளதால் அதிக வெப்பநிலை மற்றும் கோளாறு காரணமாக மின்விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு போதிய இடைவெளியில் முறையாக மின்வாரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
NTPC Deputy Manager வேலைவாய்ப்பு 2024 – 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.200000/-
இதனால் மாநிலம் முழுவதும் பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்புகளோடு மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் பிப்ரவரி 24, 25 மற்றும் 26 ம் தேதிகளான சனி, ஞாயிறு மற்றும திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் எந்த பகுதியிலும் மின்தடை செய்யப்படாது என்று மின்வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களை மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக செலவழிக்கலாம்.