புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் – தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்த நிலையில், புதிய கல்விக்கொள்கையில் திருத்தம் அவசியம் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
புதிய கல்விக்கொள்கை:
இந்தியாவில் 35 வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வந்த கல்விக்கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு முடிவு அறிவித்திருந்தது. அதற்கான வேலைகளும் தற்போது முடிவுற்ற நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் புதிய கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு – மத்திய அரசு கூறுவது என்ன?
மேலும் இந்த புதிய கல்விக்கொள்கை குறித்த முதல் அறிவிப்பில் தமிழ் மொழி மறுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக தமிழ் மக்களிடையே மத்திய அரசுக்கு எதிர்ப்புகள் வலுத்து வந்தது. பிறகு இந்த கல்விக்கொள்கை தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்த கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நாளை (மே 17) ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் ஆலோசனை கூட்டத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரை அழைக்காத காரணத்தினால், இதிலிருந்து தமிழக அரசு விலகுவதாக தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறும்போது, ‘புதிய கல்வி கொள்கையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. ஆலோசனை கூட்டத்தில் இருந்து விலகியதால், மத்திய அரசுடன் மோதல் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை. மேலும் தமிழகத்தின் இருமொழி கொள்கையை உடைத்து மும்மொழிக் கொள்கையை திணிக்கும் வகையில் இந்த புதிய கல்விக்கொள்கை உள்ளது’ என அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளியில் பணக்காரர் வீட்டு பிள்ளைகள் 3 மொழி படிக்கலாம். அரசு பள்ளியில் ஏழை குழந்தைகள் 3 மொழி படிக்க கூடாதா? மூன்றாவது மொழியை விடுப்பட்டவர்கள் படிக்கட்டுமே! இரு மொழி என்று ஆங்கிலம் இந்தி மட்டுமே கற்றுதரும் பள்ளிகள் மீது ஏன் தமிழகத்தில் தமிழ் இல்லை என்று இந்தியை நீக்குவீர்களா?