தமிழகத்தில் 2000 செவிலியர், மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!!
தமிழகத்தில் புதிதாக திறக்கப்பட்டு உள்ள மினி கிளினிக்குகளில் பணியாற்ற 2000 மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
மினி கிளினிக் பணியிடங்கள்:
காய்ச்சல், தலைவலி போன்ற சிறு வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் மினி கிளினிக்குகளை நிறுவ திட்டமிடப்பட்டது. இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவங்கி வைத்தார். தமிழகத்தில் 2000 மினி கிளினிக்குகள் நிறுவப்பட உள்ளது. ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளர் என ஒரு மினி கிளினிக்கில் 3 பேர் பணியில் இருப்பர். இப்பணிக்கு தகுதியானவர்கள் நியமனம் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
லைசென்ஸ் வாங்க புதிய நடைமுறை – மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு!!
இதனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், மினி கிளினிக்குகளுக்கு தனியார் நிறுவனம் மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும் சுகாதார அமைச்சகம் மூலம் நியமனத்தை மேற்கொள்ளுமாறு தெரிவித்தனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் புதிதாக நிறுவப்பட்டு உள்ள மினி கிளினிக்குகளில் பணியாற்ற 2000 மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவர் என அமைச்சர் கூறி உள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை 1.74 லட்சம் முனகளப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்து உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்