முதலாமாண்டு மருத்துவ மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம் – ஆள்மாறாட்டத்தை தடுக்க நடவடிக்கை!!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு முடிவடைந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகள் வருகிற 30-ம் தேதி வரை நடைபெறும். மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கான அடிப்படை வகுப்புகள் பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள்:
தமிழகத்தில் உள்ள அரசு & தனியார் மருத்துவ கல்லூரிகளில், நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. ஏழை எளிய அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்ற நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது. இதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு மற்றும் மாணவர்களின் கல்வி கட்டணம் அரசு செலுத்தும் போன்ற திட்டங்களை செயல்படுத்தியது.
கல்லூரி ஆசிரியர்களுக்கு 3 ஆண்டுகளில் பதவி உயர்வு – யூஜிசி நெறிமுறைகளின் அரசாணை!!
இந்நிலையில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று அவர்களுக்கான முதலாம் ஆண்டு அறிமுக வகுப்புகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன. இந்த வகுப்புகள் இந்த மாதம் 30ஆம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 2-ஆம் தேதி முதல் இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அறிமுக வகுப்புகளில் மாணவர்கள் எந்த மாதிரி பாடங்கள் கற்றுக் கொள்ள உள்ளனர், அவர்களின் பாடத்திட்டங்கள் என்ன என்பது குறித்து வகுப்புகள் நடத்தப்படும்.
முதல் & 2ம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு!!
மேலும் மருத்துவ கல்லூரிகளில் அதிக ஆள் மாறாட்டம் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளதால், அதனை தடுக்கும் வகையில் மாணவர்களின் விழித்திரை மற்றும் இடது பெருவிரல் கைரேகை போன்றவை எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கல்லூரிகளில் உள்ள ஆடை கட்டுப்பாடுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற வகுப்புகளில் கொரோனா பரிசோதனை முடிவுகள் வைத்திருக்கும் மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்