தமிழகத்தில் ஊரடங்கை நோக்கி கொரோனா பாதிப்பு – அலட்சியம் வேண்டாம்.. பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்!
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை 300 – ஐ தாண்டிவுள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயரும் பாதிப்பு எண்ணிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 300- ஐ தாண்டியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.
NCRTC போக்குவரத்து கழகத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைவாகத்தான் உள்ளது. அதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் தொடர்ந்து அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்புடன் இருப்பது நல்லது என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
கடந்த வருடங்களில் கொரோனா பரவலின் போது திடீரென பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்ததால் ஊரடங்கை விதிக்க வேண்டிய சூழலுக்கு அரசு தள்ளப்பட்டது. இது போன்ற நிலையை மீண்டும் உருவாக்க வேண்டாம். மக்கள் தொற்றின் தாக்கத்தை கருத்தில் கொண்டு கவனத்துடன் இருந்தால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை தவிர்க்கலாம். அதற்கு அரசு சொல்லும் விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும்.