தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளியில் தற்காலிக பணி ?!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலினால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்கள் அனைவர்க்கும் தேர்வில்லா தேர்ச்சி வழங்கப்பட்டதோடு அரியர் தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டதோடு அதற்கும் தேர்ச்சி வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.
ஏனெனில் தேர்வுகளை நடத்தகூட வாய்ப்பில்லாத நிலை தான் தற்போது உள்ளது. இதனால் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவும் தொலைக்காட்சிகளின் வழியாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்னும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை என்பதனால் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது. கேரளாவில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது அதற்கான சாத்திய கூறுகள் இல்லை என்று செங்கோட்டையன் அறிவித்து உள்ளார்
வேலையில்லாமல் இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு தேவைப்பட்டால் அரசு பள்ளியில் தற்காலிக பணியிடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்