தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல் – ரேஷன் கார்டுதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி முதல் வாரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழக அரசு ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகிறது. இதில் அரசின் அப்போதைய பொருளாதார நிலையை பொறுத்து பொருள்கள் நிர்ணயிக்கப்படும். நடப்பு ஆண்டில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இலவச வேட்டி சேலை, இதை தவிர ரொக்கமாக ரூபாய் 1000 பணமும் வழங்கப்பட உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு !
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பொருள் பரிசு பொருள்கள் வழங்கப்படும் என்று முன்னதாக அரசு தெரிவித்திருந்தது இதனை அடுத்து டோக்கன் வழங்கப்படும் தேதியும் டிசம்பர் மாத இறுதி வாரத்தில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஒரு முழு கரும்பும் அளிக்கப்பட உள்ளதால் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் தொடங்க உள்ளது. மேலும் இதற்கான டோக்கன் நாளை முதல் தமிழகம் முழுவதும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.