தமிழகத்தில் செப்டம்பரில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு? மாணவர்களுக்கு தடுப்பூசி!
12ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வரும் செப்டம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் மருத்துவ குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை குறித்து ஆசிரியர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தினசரி நேரடி வகுப்புகள் நடத்தப்படாததால் தொடக்க கல்வி மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. இந்த வருட துவக்கத்தில் கொரோனா பரவல் குறைந்த பிறகு மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. பின் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்த காரணத்தால் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. செய்முறை முறை தேர்வுகள் மட்டும் முடிவுற்றுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகமாக இருக்க காரணத்தால் பொதுத்தேர்வை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்கள் அடுத்து உயர்கல்வி கற்க இருப்பதால் பொதுத்தேர்வு அவசியமாக உள்ளது. ஒரு தரப்பினர் பொதுத்தேர்வு வேண்டாம் என்றும் மற்றொரு தரப்பினர் பொதுத்தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.
PF பணத்தை 3 நாட்களில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வாயிலாக பெற்றோர்கள் , மாணவர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்டது. தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்திய பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.