PF பணத்தை 3 நாட்களில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!

5
PF பணத்தை 3 நாட்களில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!
PF பணத்தை 3 நாட்களில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!
PF பணத்தை 3 நாட்களில் பெறும் எளிய வழிமுறைகள் இதோ!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உங்கள் அவசர உதவிக்கு பணம் தேவைப்படும் என்றால், ஒருவர் தங்களது PF கணக்கில் இருந்து தேவையான பணத்தை கீழ்காணும் வழிமுறைகள் மூலம் மூன்றே நாட்களில் எடுத்துக்கொள்ளலாம்.

PF சேமிப்பு பணம்:

அரசு ஊழியர்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை எதிர்காலத்துக்காக சேமித்து வைக்கும் திட்டங்களில் ஒன்று தான் வருங்கால வைப்பு நிதித்திட்டம் (EPFO). இதன் மூலம் பணியாளர்கள் தாங்கள் சேமித்து வைக்கும் பணத்தை தேவை ஏற்படும் போது பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது. அந்த வகையில் PF சேமிப்பு திட்டத்தில் இருந்து பணம் எடுக்க நினைப்பவர்கள் தங்கள் UAN எண்ணை பயன்படுத்தி அந்த பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ssc

இந்த சேவைகளை பெற்றுக்கொள்ளும் முன்னாக உங்கள் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு உங்களது UAN உடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்படுமாயின் அதை 3 நாட்களில் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சேவைகள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் PF திட்டத்தின் கீழ் பணம் எடுக்க,

வாட்ஸ் ஆப் (Whats App) பயனர்களுக்கு புதிய அப்டேட் – வெளியான முக்கிய அறிவிப்பு!!

  • முதலில் உங்கள் UAN எண்ணை பயன்படுத்தி EPF ன் இணையதளத்தில் login செய்ய வேண்டும்.
  • அதில் Online Services section என்பதில் Form-31, 19, and 10C என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரையில் தோன்றும்.
  • அதில் உங்கள் வங்கி கணக்கின் கடைசி நான்கு இலக்க எண் கேட்கப்படும்.
  • அதை பதிவு செய்து கிளிக் செய்தால், திரையில் ஒரு பாப்-அப் தோன்றும்.
  • அதில் உங்கள் கணக்கை சரிபார்த்த பின் OK கொடுத்து உறுதி செய்யவும்.
  • பிறகு Proceed என்பதை தேர்வு செய்யவும்.
  • பின்பு கீழே உள்ள மெனுவில் PF advance படிவம் 31-ஐ தேர்வு செய்யவும்.
  • அதில் என்ன காரணத்துக்காக பணம் வேண்டும் என்பதை தேர்வு செய்யவும்.
  • பிறகு உங்களுக்கு தேவையான தொகையை பதிவிடவும்.
  • வங்கி கணக்கு எண் அடங்கிய ஒரு செக்கை ஸ்கேன் செய்து கேட்கப்பட்டுள்ள இடத்தில் அப்லோட் செய்யவும்.
  • பிறகு உங்கள் முகவரியை உறுதி செய்யவும்.
  • பின்பு ஆதாரில் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP எண் SMS வழியாக அனுப்பப்படும்.
  • OTP எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும்.
  • பிறகு உங்களது ஆன்லைன் க்ளைம் குறிப்பிட்ட ஏற்றுக்கொள்ளப்படும்.
  • குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காரணமாக உங்களுக்கு பணம் தேவைப்படும் என்ற காரணத்தை நீங்கள் கொடுத்தால், நீங்கள் க்ளைம் செய்த தொகை 3 நாட்களுக்குள்ளாக உங்கள் கைக்கு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. You can get after 3 months not in 3 days . In customer care also they won’t respond properly. They use to say reasons alone.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!