தென்காசி மாவட்ட மினி கிளினிக்குகளில் மருத்துவ அலுவலர் பணிகள் 2021
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் மினி கிளினிக்குகள் மற்றும் நல வாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது மாவட்ட சுகாதார அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அதற்கு தகுதியான மருத்துவ பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான தகவல்களினை எங்கள் வலைப்பதிவில் கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TN Govt |
பணியின் பெயர் | Medical Officer |
பணியிடங்கள் | 41 |
கடைசி தேதி | 16.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு வேலைவாய்ப்பு :
மருத்துவ அலுவலர் பணிக்கு 41 மினி கிளினிக்குகளிலும் தலா ஒரு பணியிடம் வீதம் 41 மருத்துவ அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கல்லூரியில் இருந்து பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ததற்கான சான்று இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 16.02.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிர்வாக செயலர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நல்வாழ்வு சங்கம், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும். இந்த படிவத்தினை அருகிலுள்ள சுகாதார அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.