இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு – தமிழக அரசு புதிய ஒப்பந்தங்கள்
தமிழகத்தில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு பாடுபட்டு வருவதாக அமைச்சர் உதயகுமார் அறிவித்து உள்ளார். பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசுய எடுத்து வரும் முயற்சிகளாக அமைச்சர் பல தகவல்களை அளித்துள்ளார். இதனால் வேலை தேடி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு !
தமிழகத்தை பொறுத்தவரை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு பணிக்காக காத்திருக்கும் நிலையிலும் அன்றாடம் வேலைதேடி அலையும் நிலையிலும் தான் இன்றைய இளைஞர்கள் உள்ளனர். மேலும் கொரோனா காலத்தில் பலரும் தங்களின் வேலைகளை இழந்துள்ளது மிகப்பெரிய சமூக பிரச்சனையாக உள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது அரசின் தலையாய கடமையாக இருக்கிறது. இதனை தமிழக அரசு சிறப்பாக செய்து வருவதாக அமைச்சர் உதயகுமார் பெருமிதம் தெரிவித்து உள்ளார்.
புதிய ஒப்பந்தங்கள் !!
தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்தி இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார். தமிழகத்தில் இந்த கொரோனா காலகட்டத்திலும் தமிழக அரசு 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஒப்பந்தக்கள் மூலமாக தமிழகத்தில் மட்டும் ரூ.31,464 கோடிக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நிச்சயமாக இளைஞர்கள் அதிக பணிகளை பெறுவர் என அமைச்சர் நம்பிக்கை தெறிவிக்கிறார். இந்த அறிவிப்பால் வேலை தேடி அலையும் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது போன்ற வேலைவாய்ப்புகளை தொடர்ந்து உருவாக்கினால் மட்டுமே சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கிட முடியும் என்பதனால் அரசு சக்கரம் வேகமாக சுழன்று வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
No comments