தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப பதிவு – செப்டம்பர் 7 முதல் கலந்தாய்வு!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் ஆன்லைன் மூலம் துவங்கியுள்ள நிலையில், மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் செப்டம்பர் மாதம் 7 முதல் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறியியல் விண்ணப்பம்:
தமிழகத்தில் கொரோனா 2 ஆம் அலை பாதிப்பு காரணமாக பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் இறுதி முடிவுகள் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கியுள்ள நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று (ஜூலை 26) முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு? கி.வீரமணி வலியுறுத்தல்!
அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் மற்றும் B.Tech., மாணவர்கள் அனைவரும் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் நிலையில், தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அரசு ஊழியர்கள் இனி ‘வரதட்சணை’ பெறக்கூடாது – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
மேலும் அக்டோபர் 12 ஆம் தேதியிலிருந்து 16 ஆம் தேதி வரை துணைக்கலந்தாய்வு நடைபெறும். தொழில்நுட்பக் கல்வி மாணவர்களை பொருத்தளவு, அவர்களுக்கான பொறியியல் கலந்தாய்வை அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க கல்வி இயக்ககம் ஆலோசித்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள சுமார் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு ஆன்லைன் வழியாக இன்று (ஜூலை 26) முதல் துவங்கியுள்ள நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இவை நடைபெற உள்ளது.